கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பிரபு (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி (30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுகந்தி கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் இது தொடர்பாக பிரபுவுக்கு தெரிய வந்தது.

அவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவுடன் தன் மனைவியிடம் அது பற்றி கேட்டுள்ளார். இதனால் கோபத்தில் சுகந்தி, மாமியார் சுமதி, மாமனார் செல்வம் மற்றும் மைத்துனர் அறிவழகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து பிரபுவை திட்டி தாக்கியுள்ளனர். அதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பிரபுவின் சகோதரர் வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுமதி மற்றும் சுகந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்த நிலையில், மற்றவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.