உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா என்ற பகுதியில் இளைஞருக்கு அவரது காதலியால் எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது விபா என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருடன் சந்தீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்துள்ளார். சந்தீப் கடந்த சில நாட்களாக அந்தப் பெண்ணின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை.

இதனால் அந்தப் பெண் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அது மட்டுமல்லாமல் திருமண உடையில் டிரம்ஸ் மற்றும் டிஜேயுடன் தனது காதலனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதால் கள்ளக்காதலன் விழி பிதுங்கினார். தற்போது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.