டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையில் காவல் நிலையத்திற்கு ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக போன் மூலம் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமி சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராகுல் (20) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ராகுல் மற்றும் அவருடைய நண்பர் தேவ்தக் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இவர்களை கைது செய்த காவல்துறையினர் வேறு யாருக்கேனும் வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.