பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் மர்ஹவுரா காவல் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது பிரகாஷ் என்ற வாலிபர் இரண்டு ஆண்டுகளாக இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பிரகாஷ் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இளம் பெண் கோபமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இரவில் காதலனுக்கு போன் செய்து வரவழைத்து அவரது அந்தரங்க உறுப்புகளை கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த பிரகாஷை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.