விருதுநகர் கோவிலாங்குளம் பகுதியில் வசித்து வந்த  இளைஞர் அழகேந்திரன் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அழகேந்திரன் கடந்த 24 ஆம் தேதி மதுரை வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே தலை தனியாகத் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

இதை பார்த்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அழகேந்திரனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது,  அழகேந்திரன் காதலித்து வந்த பெண்ணின் உறவினரான பிரபாகரன்  என்பவர் ஆணவ படுகொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.