காதலனுக்காக பெண் ஒருவர் 2,500 கோடி சொத்துகளை உதறித் தள்ளிய நெகிழ்ச்சி சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. மலேசியாவை சேர்ந்த கோடீஸ்வர தம்பதிக்கு ஒரே மகளான பிறந்தவர் ஏஞ்சலின். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பல்கலை.யில் படித்தபோது பிரான்சிஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதல் விகாவாகம் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பல கோடி சொத்துக்கு அதிபதியான தன்னுடைய ஒரே மகளை நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . ஆனால் ஏஞ்சலின் தனது காதலனை தவிர யாரையும் கரம் பிடிக்க மாட்டேன்  என்று கூறியதால் தங்களின் சொத்து எதுவும் கிடையாது என்றனர். ஆனால் காதலனே முக்கியம் என சொத்துகளை தூக்கி போட்டு, காதலனை கரம் பிடித்த ஏஞ்சல் மகிழ்வாக வாழ்ந்து வருகிறார்.