உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும் இளைய  வயதுடைய ஒருவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார்.

இந்த உறவு குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில் கண்டித்துள்ளார்கள். இருப்பினும் தன்னுடைய மனைவியின் ஆசையை மதித்த பப்லு தானாகவே மனைவியை விட்டு விலகி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இது குறித்து வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.