கர்நாடக மாநிலத்தில் சந்தோஷ் (22) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்து நிலையில் அவருடைய காதலை இளம் பெண் ஏற்கவில்லை. இதனால் சந்தோஷ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சந்தோஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது சந்தோஷ் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இளம்பெண் காதலை ஏற்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக whatsappபில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.