
கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்திபுரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியரான ரித்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரித்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் துப்பட்டாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக துப்பட்டா ரித்திக்கின் கழுத்தை இறக்கியதால் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரித்திக்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.