சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்றுசரிவடைந்தது. ஆனால் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 59,000 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 7375 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 8045 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து  ஒரு கிராம் 108 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.