
தமிழகத்தில் காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பேருந்துகளில் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாக பயணிக்க முடியும் என தெரிகிறது. அண்மையில் காவலருக்கும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கமிஷனர்கள் மூலமாக காவலர்களுக்கு ஜூலை மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கப்பட உள்ளது.