
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார். கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2ஆம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23ஆம் வயதில் கிரீஸின் மன்னராக அரியணை ஏறினார். 1974ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் வயது முதிர்வு, காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார்.