
சேலம் மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் சிலர் கஞ்சா பொருள்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அதன்பின் அந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அதன்பின் காவல்துறையினர் அந்த வாலிபரின் கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 3 கிலோ எடையுள்ள கஞ்சா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்திலிருந்து அதனை கடத்தி வந்து சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு விற்பனை செய்ய போவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.