சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (65) , சிவபூஷணம் (60) தம்பதியினருக்கு மூன்று ஆண் மகன்களும் சசிகலா என்ற பெண்ணும் உள்ளனர். இந்த நிலையில் சசிகலா 10 வருடங்களுக்கு முன்பே ராமகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமகிருஷ்ணன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு அவருடைய தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்த ராமகிருஷ்ணன், மாமியார் சிவபூஷணத்திற்கு வரும் பென்ஷன் பணத்தை வாங்கி குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று குடிக்க பணம் கேட்டு தராததால் அவருடைய தலையில் கல்லை போட்டு ராமகிருஷ்ணன் கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.