கணவன்மார்கள் குடிப்பழக்கத்தை நிறுத்த பெண்கள், அவர்களை வீட்டில் மது அருந்து அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். தாய், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் மது அருந்துவது ஆண்களுக்கு சங்கடமான சூழலை ஏற்படுத்தும் என்று மத்திய பிரதேச சமூக நீதி அதிகாரம் அளித்தல் அமைச்சர் நாராயணன் சிங் குஷ்வா தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகள் இந்த யோசனையை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அவர்களே மதுவை வாங்கி கொடுத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் நாளடைவில் குடிப்பழக்கமும் குறைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். வீட்டில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் பிள்ளைகள் மது கேட்பார்கள், அது அவர்களை மனம் திரும்புவதற்கு காரணமாக கூட அமையலாம் என்று அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார்.