
இந்தியா முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களுக்கு இன்று மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுமார் 4.30 சுய உதவி குழுக்களுக்கு ரூ.2500 கோடி சுழல் நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். அதன் பிறகு சுமார் 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் சுமார் ரூ.5000 கோடி கடன் உதவியும் வழங்க உள்ளார்.
இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் ரூ.10,000 நிதி உதவி மற்றும் வங்கிகள் மூலமாக ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும். மேலும் இதில் சுழல்நிதி என்பது சுய உதவி குழுக்களின் தொகுப்பு நிதியை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை மற்றும் கடன் மேலாண்மை திறன்களை மேம்படுத்தவும் வழங்கப்படும் தொகையாகும். மேலும் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட இருக்கிறது.