![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/1d329dbd-a4fb-4867-a6ca-cf710f857589.-.jpeg)
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தினுடைய வாடிக்கையாளர்களின் தகவல்கள் மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் பயனர்களின் தரவுகள் ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
அதாவது பயனர்களின் சிம் கார்டு விவரங்கள், சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் மற்றும் வீட்டு இருப்பிடம் போன்ற தகவல்கள் இதில் இருப்பதாக ஏதெனியன் டெக்னாலஜிஸ் தெரிவிக்கிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சைபர்பாண்டம் என்ற நபர் 278 ஜிபி பிஎஸ்என்எல் டேட்டாவை 5000 டாலருக்கு விற்றது தெரியவந்திருக்கிறது.