தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு 1,000ம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவிலுக்கு 700ம், நெல்லை, திண்டுக்கல், வேலூர், கரூர்-க்கு – 600ம், தூத்துக்குடி, தஞ்சை, சிவகாசி, கும்பகோணத்துக்கு 500ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது