சமீப நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் ஒரு சில நேரங்களில் நீர்வரத்து அதிகரிக்கும். இந்த  சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சரியான பின் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நினையில் குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளுடைய கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.