கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர் இருவரும் இணைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் லிங்கேஸ்வரனும், சிறுவனும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லிங்கேஸ்வரன் மற்றும் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.