புகழ்பெற்ற பாஸ்டர் பஜிந்தர் சிங்கின் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளன. பிப்ரவரி 2025ல் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், பஜிந்தர் சிங் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியரை நோக்கி கைப்பேசியை வீசுகிறார். அதன் பிறகு பெண்கள் பயன்படுத்தும் பையை கொண்டு அந்த ஊழியரை சரமாரியாக தாக்கி அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனையடுத்து குழந்தையுடன் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண்ணையும் பஜிந்தர் சிங் அறைந்து தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பாதுகாக்க முயற்சி செய்தனர். அந்த பெண்ணுக்கும், பாஸ்டருக்கும் இடையே கடுமையான வாய் தகராறு ஏற்பட்டது

இந்நிலையில், பஜிந்தர் சிங்கின் மீது ஏற்கனவே பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், கபூர்தலா போலீசார் ஐபிசி பிரிவுகள் 354-A, 354-D மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் சிங், புகாராளரை “தனது மகள் ” என குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் அனைத்தையும் “பொய் மற்றும் அடிப்படையற்றவை” என கூறியுள்ளார். தற்போதுள்ள சிசிடிவி வீடியோ வெளியாகிய பிறகு, அவரை உடனடியாக கைது செய்யக் கோரி வலுப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் எழுந்துள்ளன.