
பஹுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் உறவுக்கார பெண் அளித்த புகாரின் பேரில் ஹாபூர் நகராட்சி தலைவர் புஷ்பா தேவி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை தொல்லை மற்றும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் கீழ் ஏப்ரல் 10 அன்று ஹாபூர் நகர கோட்ட்வாலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, முதன்மை நீதிபதி டாக்டர் பிரஹம்பால் சிங்கின் ஏப்ரல் 9ஆம் தேதியிலான உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டது என எஸ்.எச்.ஓ முநீஷ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த பெண், 2023 நவம்பர் 9ஆம் தேதி ஹாபூர் நகராட்சி தலைவர் புஷ்பா தேவியின் மகன் விஷாலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தினர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கட்சி சீட் , ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு ஃப்ளாட் எனும் வரதட்சணையை கோரியதாகவும், இதனை மறுத்ததால் மனதளவில் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. மேலும், கணவர் விஷால் ஸ்டீராய்டுகள் பயன்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைக்க முயற்சித்ததால் குடும்ப வாழ்க்கைக்கு உடல்நல ரீதியாக தகுதியற்றவராகி விட்டதாகவும், இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலாக மாமியார் மற்றும் நாத்தனார், மைத்துனர் புபேந்திராவுடன் குழந்தை பெற்றுக்கொள் என கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025 பிப்ரவரி 17ஆம் தேதி மாமனார் ஸ்ரிபால் சிங் மற்றும் மைத்துனர் புபேந்திரா அலீசை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாகவும், கத்தி கூச்சலிட்டா போது அவர்கள் உள்ளே இழுத்துச் சென்று மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. “வரதட்சணை கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், உங்களது குடும்ப பெயரை அழித்து விடுவோம்” என மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்பு, பெண் தன் பெற்றோர் வீட்டிற்கு திரும்பினார். மார்ச் 21ஆம் தேதி ஹாபூர் காவல் கண்காணிப்பாளருக்கு பதிவு செய்யப்பட்ட புகாருக்கு பதிலளிக்காததால், அவர் மார்ச் 24 அன்று நீதிமன்றத்தை நாடியாக வழக்கறிஞர் ராஜீவ் சர்மா தெரிவித்தார்.
இந்த வழக்கில் இந்திய புதிய குற்றச் சட்டமான பாரதீய ந்யாய சனிதா பிரிவுகள் 85 (மனைவியை நெருக்கடி அடையச் செய்தல்), 115(2) (தன்னைத்தானே காயப்படுத்தல்), 351(2) (தடுக்கும் வகையில் மிரட்டல்), 75 (பாலியல் தொல்லை), 76 (பெண்ணின் ஆடையை கழற்றும் நோக்குடன் வன்முறை) மற்றும் வரதட்சணை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள்: ஹாபூர் நகராட்சி தலைவர் புஷ்பா தேவி, அவரது கணவர் ஸ்ரிபால் சிங், மகன் விஷால், மைத்துனர் புபேந்திரா, மைத்துனிகள் நிஷா, சிவானி ஆகியோர் உள்ளனர். இவ்வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டுகள் அனைத்தும் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.