
தமிழ்நாட்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தைப்பூச தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை என்று அறிவிக்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம் இயற்றினார்.
இதைத்தொடர்ந்து தைப்பூசத் தினத்தன்று ஒவ்வொரு வருடமும் விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் அந்த வகையில் நடப்பாண்டிலும் வருகிற செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச தினத்தில் பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.