![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/07/4e0047b3-2db4-40e0-9296-6b103ab06840.jpg)
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இவருடைய அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம் பிரசாத் ரெட்டி என்பவர் இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சராக இருக்கிறார். இவருடைய மனைவி ஹரிதா ரெட்டி. இவர் ஒரு நிகழ்ச்சிக்காக காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது போலீஸ்காரர் ஒருவர் அவரை காத்திருக்க வைத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிதா ரெட்டி அவரை சரமாரியாக விமர்சித்துள்ளார். அவர் அந்த போலீஸ்காரரிடம் இன்னும் காலை ஆகவில்லையா.? இது என்ன கான்பிரன்ஸ். இப்ப கல்யாணத்துக்கு வந்திருக்கியா.? இல்லன்னா ட்யூட்டிக்கு வந்திருக்கியா.? உங்களுக்காக அரைமணி நேரம் நான் காத்திருந்தேன். உங்களுக்கெல்லாம் யார் சம்பளம் தருவது.? அரசாங்கமா இல்லனா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியா என்று கேட்கிறார். அந்த வீடியோவில் சப் இன்ஸ்பெக்டர் கடைசியில் அமைச்சரின் மனைவிக்கு சல்யூட் அடித்து காரை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமா? என்று விமர்சித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
High-handed behaviour of wife of #AndhraPradesh minister #RamPrasadReddy; HarithaReddy to SI Ramesh: “isn’t it dawn yet? What conference do you have that CI doesn’t? You are not in uniform, have you come to wedding or duty? Waited half hour for you. Is govt giving salary or ycp?” pic.twitter.com/VnQ1QbV5yi
— Uma Sudhir (@umasudhir) July 1, 2024