கர்நாடக மாநிலம் பெங்களூரில் 56 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார்‌ தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக இவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை யாரிடமும் கூறாமல் காசநோய் இருப்பதாக மட்டுமே கூறிவந்துள்ளார். இவருடைய நண்பர் சியாம் பாட்டீல். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடங்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதில் சியாம் பாட்டீலுக்கு தன் நண்பருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியாது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனியார் நிறுவன ஊழியரின் மனைவி உட்பட குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால் ஊழியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சியாம் பாட்டீல் அங்கு சென்றுள்ளார்‌. அவர் தன்னுடைய நண்பருக்கு மயக்கம் மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்ததோடு முகத்தில் மயக்கமருந்தையும் தெளித்துள்ளார். பின்னர் அவருடன் கட்டாய ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். பின்னர் வீட்டிலிருந்த 88 கிராம் தங்க நகைகள், ரூ.25000 ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையில் மயக்கம் தெளிந்து ஊழியர் எழுந்து பார்த்தபோது சியாம் அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரியின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சியாம் பாட்டீலை வலைவீசி தேடி வருகிறார்கள்.