இந்தியாவில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் இதனை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது கேஸ் சிலிண்டர் வெடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் இழப்பீடு வழங்கப்படும். சிலிண்டர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டால் அவருக்கு 10 லட்சம் வீதம் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை அந்த குடும்பத்திற்கு கிடைக்கும்.

யாருக்காவது சாயம் ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும். மேலும் சொத்து சேதத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும். இதற்கு முதலில் காவல் நிலையத்தில் நீங்கள் புகார் அளிக்க வேண்டும். பிறகு FIR காப்பி, மருத்துவமனை பில், இறந்துவிட்டால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை டீலரிடம் ஒப்படைத்து அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீடு தொகையை பெறலாம்