இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக பிரபலமானவர் ராஷி கண்ணா. நீண்ட நாட்களாக தெலுங்கு பக்கமே நடித்து வந்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படமே நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது . இதனை தொடர்ந்து ஜெயம் ரவியோடு அடங்கமறு படத்திலும், சங்கத்தமிழன் படத்திலும் நடித்திருந்தார். தன்னுடைய அருமையான நடிப்பால் பலரையும் கவர்ந்த ராசி கண்ணா அரண்மனை 4 படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் அவருடைய சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம் .அந்த வகையில் தற்போது கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஆனால் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை ராசி கண்ணாவின் சகோதரருக்கு பிறந்த குழந்தையாகும். அந்த குழந்தையை தூக்கி கொஞ்சம் போது எடுத்த புகைப்படத்தை தான் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே இளவரசி வந்திருக்கிறாள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.