பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் தங்கவேல்(49)- மாரியம்மாள்(45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமரேசன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தங்கவேலுக்கு மாரியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று தகராறு ஏற்பட்ட போது தங்கவேல் கோபத்தில் தனது மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை தடுக்க வந்த மகள் சுமதியின் முதுகிலும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் தாயும், மகளும் அலறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாரியம்மாளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.