நடிகர் விஜய் தனது 68-வது திரைப்படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்து விட்டார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா என பல இடங்களில் அட்டகாசமாக நடந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் தான் நடித்து முடித்துள்ள கோட் படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த அவர் அவசரப்பட்டு ஓய்வு அறிவித்து விட்டேன், இன்னொரு படம் உங்க கூட பண்ணி இருக்கலாம் என வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளார். விஜயின் கமெண்ட் கேட்டு பட குழுவினர் செம குஷியில் உள்ளனர்.