ஐசிசி டி20 இறுதிப் போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது. இந்நிலையில் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் அப்போது கோப்பையை வென்ற பார்படாஸ் மைதானத்தின் மண்ணை எடுத்து சாப்பிட்டதோடு தொட்டு வணங்கினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)