கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொச்சாவூர் பகுதியில் பிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் (18) என்ற மகனும், பவானி (15) என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் பவானி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் சிக்கி  மாதேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் சிறுமி பவானி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி பவானி மற்றும் அவருடைய அக்கா ஆகியோர் அத்தை வீட்டுக்கு சென்றனர். அப்போது ஒரு கிணற்றில் குதித்து பவானி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தளி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பவானியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.