ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் சேர்த்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் பிறகு பேசிய விராட் கோலி இதுவே என்னுடைய கடைசி டி20 உலக கோப்பை போட்டி. நாங்கள் எதை நினைத்தோமோ அதை சாதித்து விட்டோம். எனவே இந்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதாவது உலக கோப்பையை வென்ற பிறகு ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். தற்போது அது நடந்து விட்டதால் இனி டி20 உலக கோப்பை போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தார். இருப்பினும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக என்று கூறினார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஐபிஎல் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.