கோவை பொள்ளாச்சி அருகே நேற்று ரவிச்சந்திரன் (55), மகேந்திரன் (46) ஆகியோர் மது அருந்திய நிலையில் வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இருவருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவமும் தற்போது சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.