நாம் தமிழர் கட்சியின் சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டாக்டர் அபிநயா வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திருவாமத்தூர் பகுதியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக சட்டசபையில் கடந்த 10 நாட்களாக சாராயத்தை தவிர வேறு எதைப் பற்றியும் பேசவில்லை.

இது சட்டசபை கிடையாது சாராய சபை. அங்கு அதை தவிர வேறு எதை பற்றியும் பேசவில்லை. சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் தண்ணீர் குடித்து உயிரிழந்து விட்டான். இப்பொழுது சாராயம் மற்றும் தண்ணீர் என அனைத்தும் விஷம் ஆகிவிட்டது. இதை மாற்ற பெரியவர் முதல் சிறியவர் வரை முன்வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இருப்பினும் இந்த மாற்றத்தை யார் கொண்டு வருவார். மாற்றம் மாற்றம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எதுவும் மாறாது. எனவே அதை மாற்ற நாம் தான் முன்வர வேண்டும் என்று கூறினார்.