
கடலூர் அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிலம் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் சம்பாதித்த பணத்திலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.
இனி உதவி செய்வதற்காகவே நான் சம்பாதிக்க இருக்கிறேன். தொடர்ந்து உதவிகள் செய்து கொண்டே இருப்பேன் என்று கூறினார். அதன் பிறகு அவரிடம் செய்தியாளர்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திடீரென இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்களே, காலை 4.30 மணி முதல் 6 மணி முதல் எனக்கு திருமணம். மேலும் திருமண தேதியை நான் பின்னர் அறிவிக்கிறேன் என்று கலகலப்பாக கூறினார்.