
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் நிஷா(44). நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நிஷா தனது மகள் ஜகீனா (16) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிஷா, ஜகீனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் நிஷாவின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று நிஷா, ஜகீனா ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.