
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது. சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது. இந்நிலையில் தீங்குதரும் எந்த ரசாயனமும் இல்லாத ஏலக்காய் வழங்க வேண்டும் என்ற விதிகளுடன் புதிய டெண்டரை தேவசம் போர்டு விடுவித்துள்ளது.