மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பத்லாப்பூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் 24 வயது வாலிபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு இடையில் அந்த வாலிபர் சிறுமியை மிரட்டி ஆபாச படங்களை எடுத்துள்ளார்.

அதன் பிறகு ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டிய அவர் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.