இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுல் தற்போது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் முகமது ஷமி கடினமான பவுலர் என்றும் அவருடைய பந்துவீச்சை பயிற்சியின் போது கூட எதிர் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அதேவேளையில் சர்வதேச அளவில் ரஷித் கான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றும் அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள கஷ்டப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.