நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தற்போது ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஒரு குதிரை துள்ளி குதிப்பதை போன்று எப்போதும் என்னால் முடிந்தவரை என் நாட்டுக்காக நான் செய்து வருகிறேன். இருப்பினும் நான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நினைவாகிவிட்டது. மேலும் என்னுடைய நினைவுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் உங்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.