தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. இதனால் அவர் கடைசி நாளில் தன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அந்த பள்ளியை விட்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருந்த மாணவர்கள் அனைவரும், சார் எங்களை விட்டுப் போகாதீங்க ப்ளீஸ் என்று ஆசிரியரின் கால்களை பிடித்து கெஞ்சி அழுதனர். இதனைக் கண்டு மனம் வருந்திய ஆசிரியர் செய்வதறியாது கண்கலங்கி நின்றார். மாணவர்களின் இந்த செயல் அங்கிருந்து ஆசிரியர்கள் அனைவரையும் கலங்க வைத்தது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.