தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஷீலா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை. இவர் அங்குள்ள கடைகளில் காசு வாங்கி பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் பாலா நகர் பகுதியில் ஷீலா திடீரென கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஷீலாவின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது அவருடைய உடலில் வெட்டு காயங்கள் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஷீலாவின் கொலை குறித்து மற்ற திருநங்கைகளுக்கு தெரிய வந்தது. மேலும் இதனால் அவர்கள் காவல் நிலையத்தின் முன்பாக திரண்டு கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.