
திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யுனிஸ்ட் கட்சியினர், பழைய நீடாமங்கலம் புது பாலத்தில் இருந்து நீடாமங்கலம் பெரியார் சாலை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும், வையகளத்தூர் மேம்பாலத்தில் இருந்து புது மேம்பாலம் வரையிலான சாலையை செப்பனிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நீடாமங்கலம் தாசில்தார் பரஞ்சோதி தலைமையில் இதற்கான சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள், ஜான் கென்னடி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உத்தரவு அளித்துள்ளனர். அதன் பின் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.