உலகிலேயே மிக உயரமான போர்முனையாக காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிசிகரப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன் கடும் குளிரோடும் போராட வேண்டும். இந்த பகுதியில் முதல் முறையாக இந்திய பெண் ராணுவ அதிகாரியான கேப்டன் சிவா சவுகான் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் குமார் என்ற காவல் நிலையத்தில் 3 மாத காலத்திற்கு பணிபுரிவார்.

இந்நிலையில் சிவா சவுகான் ராணுவ எஞ்ஜினீயர்கள் பிரிவை சேர்ந்தவர். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதன் பிறகு 11 வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்த சிவா சவுகான் ராணுவத்தின் மீது உள்ள அதிகப்பற்றின் காரணமாக சென்னையில் உள்ள ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று ராணுவத்தில் சேர்ந்துள்ளார். மேலும் சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற சிவா சவுக்கானுக்கு ராணுவ மந்திரி ராஜநாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.