
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. அதனைத் தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார்.
இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது, தாங்க முடியாது, அந்த அளவிற்கு அங்கு பெண்களை மோசமாக நடத்துகின்றனர். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என யாரும் பெண்களை மதிப்பதே இல்லை. நான் அங்கு மிகவும் கஷ்டப்பட்டேன், இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன் என்று இவர் கூறியுள்ளார்.