
ஹைதராபாத்தில் பெண் ஒருவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேலையை பெறுவதற்கு இவருடைய நண்பர் கௌதம் ரெட்டி என்பவர் உதவி செய்துள்ளார். இதனால் அவருக்கும் தன்னுடைய மற்ற நண்பருக்கும் அந்தப் பெண் பார்ட்டி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அவர்கள் அனைவரும் ஒரு பாருக்கு சென்றனர். அப்போது அனைவரும் மது குடித்தனர். இதைதொடர்ந்து அந்த பெண்ணை ஒரு ரூமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கௌதம் ரெட்டி மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளம் பெண்ணும், கௌதம் ரெட்டியும் இரண்டாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்து வந்தனர் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.