ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இரு குடும்பங்கள் அருகருகே வசித்து வருகின்றன. இரு வீட்டாரும் நட்புடன் பழகி வந்த நிலையில் அவர்களில் ஒரு குடும்பத்தில் இருந்த நான்காம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி நேற்று காலை வீட்டில் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அறியாமல் பக்கத்து வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமியின் தாய் இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரித்த போது வீட்டின் மூலையில் இருந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.

அதாவது பத்தாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவன் இரண்டு திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை கொலை செய்துவிட்டு தப்பினர் என்று கூறியுள்ளான். இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது சிறுமியை படுகொலை செய்த விவரங்களை மாணவன் ஒப்புக்கொண்டான். கடனாக வாங்கி 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டில் மாணவன் நகை திருட்டில் ஈடுபட்டபோது சிறுமி அதனை பார்த்ததால் பயந்து கொலை செய்ததாக மாணவன் ஒப்புக்கொண்டான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.