சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிரையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் கடும் வயிற்றுப் போக்கால் 11 வயது சிறுவன் உயிரிழந்தார்.

அவர் குடித்த குடிநீரில் எந்த கலப்படமுமே இல்லை. மேலும், அந்த குடிநீரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று ஆய்வு தகவல் உள்ளது. சிறுவனின் பிரேத பரிசோதனைக்கு  பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றார்.