சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து என்ன நடந்து என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில், மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை, சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனியார் சார்பாக கேன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.