இங்கிலாந்து நாட்டின் தெற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ் வொர்த் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பெண் போலீஸ் அதிகாரியான லிண்டா டி சவுசா அப்ரு (31) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அந்த சிறையில் இருக்கும் ஒரு கைதியுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த கைதியின் அறையில் லிண்டா அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை மற்றொரு கைதி செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதற்கிடையில் வீடியோ வெளியானதால் லிண்டா தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார்.